Apr 21, 2014

யுகங்கள்

கிருதயுகம் , திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம். 

இந்த நான்கு யுகமும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது தேவயுகம் எனப்படும்.

1 சதுர்யுகம் = 10 யுகங்கள்
1 மன்வந்தரம் = 72  சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14  மன்வந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14  மன்வந்திரங்கள்
1 பிரம்மா காலம் = (1  கல்பம் + 1  மகா பிரளயம்)

இதன் பின் பிரம்மாவின் காலம் சுழலும்.

யுகம் என்பது காலத்தைக் கணக்கிட உதவும் ஒரு பொதுவான அலகு. மொத்தம் 4,32,000 ஆண்டுகள் சேர்ந்தது ஒரு யுகம் என்று அழைக்கப்படும். இந்து புராணங்களின்படி நான்கு வகையான யுகங்கள் இருக்கின்றன. அவை முறையே கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் என்பனவாம். ஒவ்வொரு யுகமும் வெவ்வேறான கால அளவைக் கொண்டது.

1 யுகம் = 4,32,000 ஆண்டுகள்
கிருத யுகம் = 4 யுகங்கள் (17,28,000 ஆண்டுகள்)
த்ரேதா யுகம் = 3 யுகங்கள் (12,96,000 ஆண்டுகள்)
துவாபர யுகம் = 2 யுகங்கள் (8,64,000 ஆண்டுகள்)
கலியுகம் = 1 யுகம் (4,32,000 ஆண்டுகள்)

பூமியில் இந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரிசையாக நிகழும். முதலில் கிருதயுகம், பிறகு த்ரேதாயுகம், அதன்பிறகு துவாபரயுகம், பிறகு கடைசியாக கலியுகம் என வரிசையாக நடக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகம் முடியும் சமயத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் தோன்றி தீயசக்தியான "கலி"யுடன் போரிட்டு வெல்வார். பிறகு புதிய உலகம் பிறக்கும். கிருதயுகம் தோன்றும்.

கிருதயுகத்திலிருந்து கலியுகம் வரையிலான, இந்த ஒரு முழுமையான சுழற்சிக்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 10 யுகங்களின் கால அளவைக்கொண்டது சதுர்யுகம்.
சதுர்யுகம் = கிருதயுகம் + த்ரேதாயுகம் + துவாபரயுகம் + கலியுகம் = 10 யுகங்கள்.
ஒரு சதுர்யுகத்தின் மொத்த கால அளவை, ஆண்டுகளில் கூறினால் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் வரும். இதைப்போல 72 சுழற்சிகள் நடந்து முடிந்தால் அது ஒரு மனுவந்தரம் என்று அழைக்கப்படும். அதாவது 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவந்தரம். அதேபோல 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். மற்றொரு 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு இரவு. ஆக மொத்தம் 28 மனுவந்தரங்கள் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள்.


1 சதுர்யுகம் = 10 யுகங்கள்
1 மன்வந்தரம் = 72  சதுர்யுகங்கள்
1 கல்பம் = 14  மனுவந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்
1 மகா பிரளயம் = 14  மனுவந்திரங்கள் = பிரம்மாவின் ஒரு இரவு
1 பிரம்மா நாள் = (1  கல்பம் + 1  மகா பிரளயம்) = 28 மனுவந்தரங்கள்

இதுபோல பிரம்மா மொத்தம் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சமே அழிந்து மறுபடியும் புதிய பிரம்மா பிறப்பார். புதிய உலகைப் படைப்பார். அது மட்டுமின்றி 4 வகையான யுகங்கள் பார்த்தோமில்லையா. அது ஒவ்வொன்றிலும் மனிதனின் ஆயுட்காலம் வேறுபடும். உதாரணத்துக்கு கலியுகத்தின் ஆரம்பத்தில் மனிதனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் தான். ஆனால் மற்ற யுகங்களில் எவ்வளவு எனத்தெரியுமா ?

கிருத யுகம் = மனித ஆயுள் 1 லட்சம் ஆண்டுகள்
த்ரேதா யுகம் = மனித ஆயுள் 10,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = மனித ஆயுள் 1000 ஆண்டுகள்
கலியுகம் = மனித ஆயுள் 100 வருடங்கள்

கலியுகம் முடியும் சமயத்தில் மனித இனத்தின் ஆயுட்காலம் குறைந்துகொண்டே வந்து 20 ஆண்டுகள் வரைக்கும் செல்லும். அதற்குப் பிறகு உலகம் அழிந்து மீண்டும் கிருதயுகம் பிறக்கும். அதேபோல நற்குணங்களும், பாவங்களும் ஒவ்வொரு யுகத்திலும் வேறுபடும். கிருதயுகத்தில் எந்த பாவமும் இருக்காது. முழுக்க முழுக்க நற்குணங்கள் நிறைந்த யுகம் கிருதயுகம். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் யுகம் அதுதான். அதேபோல மற்ற யுகங்களில்,


கிருத யுகம் = பாவமே இருக்காது. முழுக்க நற்குணங்கள் நிறைந்த யுகம்.
த்ரேதா யுகம் = 1 பங்கு பாவம் + 3 பங்கு நற்குணங்கள்
துவாபர யுகம் = 2 பங்கு பாவம் + 2 பங்கு நற்குணங்கள்
கலியுகம் =  1 பங்குதான் நற்குணம் இருக்கும். மீதி முழுக்க பாவம் நிறைந்த யுகம்.

இப்படி இந்த சுழற்சியில், இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் ஆரம்பித்து 5000 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகின்றனர். அப்படியே ஆண்டுகள் கடக்க கடக்க, உலகத்தில் பழி, பாவங்கள் அதிகரிக்குமாம். நல்ல விஷயங்கள் எங்குமே நடக்காது. போட்டி, பொறாமை அதிகரித்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஒழுக்கமற்ற நிலைமை ஏற்பட்டு உலகமே அழிவுப்பாதையில் இறங்கும். ஆட்சியாளர்கள் மக்களின் செல்வத்தைத் திருடுவார்கள். அவர்களைக் காத்திட மாட்டார்கள். மக்கள் அகதிகளாக நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கல்வியறிவு மதிக்கப்பட மாட்டாது. மக்கள் தவறான கருத்துக்களையே ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்படும். பொறாமை எங்கும் நிறைந்திருக்கும். மழை பெய்யாது. நீர் கிடைக்காது. பசி, பஞ்சம் தலை விரித்தாடும். பிச்சைக்காரர்களும், வேலையற்றோரும் நிறைந்திருப்பர். பணம் நிறைய முக்கியத்துவம்  பெறும். இளம்பெண்கள் கற்பை விலைபேசுவர். சிசுக்கள் வயிற்றிலிருக்கும் போதே கொல்லப்படும். உலகம் அழியும். (இதில் அனைத்துமே இப்போதே நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலியுகம் ஆரம்பித்து 5000 வருடங்களுக்குள்ளேயே இவ்வளவு நடக்கிறதென்றால், போகப்போக என்னாகுமோ ?)

நான்கு யுகங்களும் அதில் அடங்கும் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும்

கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவம் ஏற்கனவே இந்திய புராணங்களில் தசவதாரங்களாக விளகக்ப்பட்டுள்ளன.

சத்தியுக அவதாரங்கள்
---------------------
1,மச்ச அவதாராம் (மீன்)
முதன் முதலில் உயுரினம் நீரில் தோன்றியது.

2, கூர்ம அவதாரம் (ஆமை)
கொஞ்சம் தண்ணீருக்கு மேலேயும் கொஞ்சம் தண்ணீருக்கு கீழேயும் வசிக்கும்.(Water and Land)

3, வராக அவதாரம் (காட்டுப்பன்றி)
பூமிக்கு மேல், நீருள்ள சகதியில் வசிக்கும் மிருகம் (Wet Land)

4, நரசிம்ம அவதாரம் (சிங்கம் + மனிதன்)
விலங்கு நிலையும் மனித நிலையும் கலந்தது (Animal Man)
5, வாமன அவதாரம் (குள்ள மனிதன்)
குட்டையான மனித நிலைக்கு மாற்றம் (Dwarf Man)

திரேதா யுக அவதார்ங்கள்
------------------------

6, பரசுராம் அவதாரம் (போர் குணம்)
கோபம் கொண்ட மனித நிலை (Furious Man)

7, ராம அவதாரம் (முழு மனிதன்)
முழுவளர்ச்சியடைந்த மனித நிலை (Ideal Man)

துவாபரயுக அவதாரம்
------------------------

8, கிருஷ்ண அவதாரம் (வல்லமையுள்ள மனிதன்)
விளையாட்டும், வினையும் கலந்த சர்வவல்லமை பெற்ற மனித நிலை (Super Man)

கலியுக அவதாரங்கள்
---------------------

9, புத்த அவதாரம் (ஆன்மீக மனிதன்)
ஆன்மீக உச்சமடைந்த மனித நிலை (Spiritual Man)

10, கல்கி அவதாரம் (சர்வ வல்லமையுள்ள மனிதன்)
போர்குணம், முழுமனித நிலை, சர்வ வல்லமை, ஆன்மீக ஆற்றல் அனைத்தும் பெற்ற தெய்வீக நிலை (Supersonic Man)

ஓம் நமச்சிவாய....

தமிழின் பெருமை

1976 வாவ் அலைவரிசை பற்றி யாருக்காவது தெரியுமா?? அந்த அலைவரிசை வேற்று கிரவாசிகள் அனுப்பியது என்று நாசா முடிவுசெய்தது. ஒரு வேளை வேற்று கிரவாசிகள் பூமிக்கு வந்தார்களேயானால் என்ன மொழி பேசினால் அவர்களுக்கு தெரியும் என ஆராய்ச்சி செய்தார்கள்.

அப்போது கிடைத்த தகவல் படி உலகத்தில் இருக்கும் பழமையான மொழிகளை முதலில் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம் என முடிவுசெய்தார்கள். பின்னர் அவர்களின் ஆராய்ச்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தனர். வேற்று கிரவாசிகள் பேசினால் அவர்களுடன் தொடர்புகொள்ள ஆசிய மொழிகள் இரண்டு மொழிகள் உறுதி செய்யப்பட்டது.

அந்த விலைமதிப்பில்லா இரு மொழிகளான தமிழும், சீனாமொழியும்தான்.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,

முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,

எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.

எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

அற்புதமான தமிழர்களின் வரலாறு:

தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை"

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்

கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதார, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.
Photo: அற்புதமான தமிழர்களின் வரலாறு:

"தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை"

கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000

நியாண்டெர்தல் மனிதன்

கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதார, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

கி.பி. 1 - 20

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

காத்திருப்பு....!

புழுவிற்க்கு மீன் ஆசைப்பட்டது.
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்.

மீனுக்கு சிக்கியது புழு.
மனிதனுக்கு சிக்கியது மீன்.
ஆனால்... புழுவிற்க்கு??

ஆனாலும் காத்திருந்தது புழு,
மனிதன் மண்ணுக்குள் வரும் வரை...

ஆசையே துன்பத்திற்க்கு காரணமாம்!
எதுவும் எதைவிடவும் உயர்ந்ததும் இல்லை,
தாழ்ந்ததும் இல்லை!!

Feb 28, 2014

தாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்

ரோம் நகரில் கி.பி.1427 இல் ஒரு சர்க்கஸ் கம்பெனி செயல்பட்டுவந்தது.அந்த சர்க்கஸ் கம்பெனியின் சிறப்பு யானைதான்! அந்த யானையின் பாகன் அந்த கம்பெனியிலேயே தங்கியிருந்து,யானைக்குப் பயிற்சி கொடுக்கிறான்.குட்டியாக இருந்த யானை மிகுந்த உற்சாகத்துடன் பாகன் கற்றுக் கொடுத்ததை சரியாகச் செய்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.மூன்று கால்களில் நிற்பது,முக்காலியில் ஏறுவது, சைக்கிள் ஒட்டுவது என அந்த யானை செய்யும் சாகசங்களால் சர்க்கஸீக்கு வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நாட்கள் நகர்கின்றன;ஒருநாள் அந்த யானைப்பாகன் இறந்துவிடுகிறான்.அதில் இருந்து அந்த யானை சரிவர சாப்பிடுவது இல்லை;அதன் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்கிறது.அதன் உடல் சில நாட்களிலேயே மெலிந்து சோர்ந்து போனது;சர்க்கஸ் முதலாளி கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து காட்டுகிறார்.அவர்கள் மருந்து,மாத்திரைகளை கொடுக்கிறார்கள்.ஆனாலும்,அதன் உடல்நிலையில் எந்த சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை;அப்போது அங்கு வந்த வழிப்போக்கன் சர்க்கஸ் முதலாளியிடம், ‘யானையை நான் குணப்படுத்தட்டுமா?’ என்று கேட்கிறான்.அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே என முடிவு செய்கிறார்.

அந்த வழிப்போக்கன் யானையின் அருகில் சென்று,அதன் காதருகே நின்று யானையிடம் ஏதோ சொன்னான்.யானையின் கண்களில் உற்சாகம் தெரியத் துவங்கியது.உடனே அது எழுந்து போய் சாப்பாடு வைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாப்பிட்டது.சர்க்கஸ் முதலாளி,அந்த நபரிடம் சென்று, “ நீங்கள் அதன் காதருகே எதையோ சொன்னதும் சாப்பிட்டதே! அப்படி என்னதான் சொன்னீர்கள்?” என்று கேட்டார்.அந்த வழிப்போக்கன், “இந்த யானை இந்தியாவில் இருந்து வந்துள்ளது.யானைப்பாகன் இந்தியில் பேசி அதை பராமரித்து வந்தான்.பாகன் இல்லாததால் இந்த யானைக்கு அவன் பேசிய மொழியை கேட்காமல் வருத்தப்பட்டது.நானும் இந்தியாவில் இருந்து வருகிறேன்.அதனால் யானைக்கு அந்த மொழியில், ‘அட முட்டாள் யானையே இப்படி சாப்பிடாமல் கிடந்தால் உடல் மெலிந்து செத்துவிடுவாய்’ என்று சொன்னேன்’ அவ்வளவுதான்” என்றான்.

ஒரு யானைக்குக் கூட அதைப்பழக்கியவனின் மொழி என்பது முக்கியமாக இருக்கிறது.ஆனால்,தமிழ்நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மரியாதை என்ற அடிமைப்புத்தி பரவிவிட்டது.மரபும்,தொன்மையும் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை நாமே புரிந்து கொள்ளவில்லை;

உலகத்திலேயே எந்த நாட்டிலும் தாய்மொழியைத் தெரியாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது.ஆனால்,இங்கே மட்டும் தான் அது நடக்கிறது.இங்கே தாய்மொழியைக் கற்றுக்கொள்ளாமலேயே எந்தத் துறையிலும் உயர் கல்வியைக் கற்றுவிட முடியும்.ஆனால்,அது வாழ்க்கைச் சார்ந்ததாக இருக்குமா? என்பது கேள்விக்குறியே.நாம் அனைவருமே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.அதற்கு நமது தாய்மொழியின் பெருமையும்,அதன் தொன்மையையும் தெரிந்திருப்பது அவசியம்.

நன்றி: ஜூனியர் விகடன்.

சிவராத்திரி

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நிதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

அன்று முழுவது‌ம் உணவருந்தக் கூடாது. பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் சிவ ஆலயங்களில் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

  • முதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் – சந்தனப்பூச்சு – வில்வம், தாமரை அலங்காரம் – அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் – ருக்வேத பாராயணம்.
  • இரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் – பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – பாயாசம் நிவேதனம் – யசுர் வேத பாராயணம்.
  • மூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் – பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் – வில்வம் அர்ச்சனை – எள் அன்னம் நிவேதனம் – சாமவேத பாராயணம்.
  • நான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் – நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் – அர்ச்சனை – சுத்தான்னம் நிவேதனம் – அதர்வன வேத பாராயணம்.


அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும் என விரும்பும் எவர் ஒருவரும், சிரத்தையுடன் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைபிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.

நன்றி: தினமணி

Feb 24, 2014

வம்பு பேசாதீர்கள்.... ஆப்பு காத்திருக்கிறது!

ஒரு துறவி காட்டில் நிஷ்டையில் இருந்தார்.அவர் சுரதலப்பிட்சை எடுத்துச் சாப்பிடுவார்.(சுரதலப்பிட்சை என்றால் கையை நீட்டியபடி தவத்தில் இருப்பார்;அவர் கையில் யார் எதை வைக்கிறார்களோ அதுதான் அவருக்கு அன்றைய உணவு!அதைத்தான் சாப்பிட வேண்டும்;)


ஒருநாள்,வேட்டையாட வந்த அந்தப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் அந்த துறவி தவம் செய்து வந்த இடத்திற்கு வந்தான்;வேட்டையாடிக் களைத்துப் போன அந்த மன்னனுக்கு தாகம் எடுக்கவே இந்த துறவியைப் பார்த்து தண்ணீர் கேட்டான்.தன்னை மறந்து தவத்தில் இருந்த அந்த துறவிக்கு மன்னன் கேட்டது காதில் விழவில்லை;மன்னனுக்கோ வேட்டையாடிய களைப்பில்,இந்தச் சாமியார் தன்னை மதிக்கவில்லை; என்று நினைத்து,கோபத்தில் குதிரைச் சாணத்தை அந்த துறவியின் கைகளில் வைத்துவிட்டு குடிநீர் தேடி வேறு இடம் போய்விட்டான்.


துறவி கண்விழித்துப் பார்த்தபோது,தனது கையில் குதிரைச்சாணம் இருந்ததைக் கண்டு,அதையே அன்றைய உணவாகச் சாப்பிட்டுவிட்டார்.யார் எதை அவர் கையில் வைத்தாலும் அதைச் சாப்பிட வேண்டும் என்பது அவர் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதி.இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆயின.மன்னன் இந்த சம்பவத்தை மறந்தே போனான்.


மன்னனின் மகள் பருவமடைந்து,பல ஆண்டுகள் ஆகியும் திருமணம் ஆகவில்லை;சரியான வரன் அமையவேயில்லை;மன்னன் தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, ‘இளவரசிக்கு ஏதாவது தோஷம் இருக்கிறதா? என்று பாருங்கள்’ என்று தனது மகளுடைய ஜாதகத்தைக் கொடுத்தான்.ஜோதிடர் அதை ஆராய்ந்து, “தேவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக யாகம் ஒன்று நடத்துங்கள்;அவ்வாறு செய்தால் இளவரசியின் திருமணதோஷம் நீங்கிவிடும்” என்று கணித்துச் சொன்னார்.அதன்படி,தேவர்களை மகிழ்ச்சிப்படுத்துவிதமாக யாகம் ஒன்றை நடத்தினார் மன்னன்.


துறவிக்கு மன்னன் செய்த பாவச்செயலை அறிந்த தேவர்கள்,காட்டுக்குப்போய் அந்த துறவியைச் சந்தித்தார்கள்.அவர்கள் நடந்ததை துறவியிடம் தெரிவித்தனர். “மன்னன் எங்களைக் குறித்து யாகம் நடத்தினான்.யாகத்தின் பலனை நாங்கள் தரவேண்டியது எங்கள் கடமை ஆகும்.ஆனால்,அதற்கு முன் உங்களை குதிரைச்சாணம் சாப்பிட வைத்த பாவத்தைப்போக்கினால் தான் நாங்கள் தரும் வரம் பலிதமாகும்;எனவே,இதற்குத் தாங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று விவரித்தனர்.துறவியும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.


துறவி ,மன்னனின் அரண்மனைக்குச் சென்று, மன்னன் தனக்குச் செய்த இழிசெயலை நினைவூட்டினார். ‘நான் உனக்கு எந்த சாபத்தையும் கொடுக்கவில்லை;நீ செய்த வினையின் பலனை நீ அறுவடை செய்து கொண்டிருக்கிறாய்.இதிலிருந்து தப்பிக்க நான் உனக்கு ஒரு வழி சொல்கிறேன்;கொஞ்ச காலத்திற்கு அரசாங்கத்தை உனது மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு.நீயும் உன் மகளும் காட்டிற்குச் சென்று அங்கு ஆசிரமம் கட்டிக்கொண்டு இருங்கள்;நான் பட்ட துயரங்களை நீயும் அனுபவிக்கும் போது தான் என்னைப் போன்ற துறவிகள் படும் கஷ்டங்கள் உனக்கும் புரியும்.உனது பாவமும் மன்னிக்கப்படும்;தினமும் நீ என்னைப் போன்று பிச்சை எடுத்துதான் சாப்பிட வேண்டும்;’ என்று உபதேசம்  செய்தார்.


மன்னனும் துறவியிடம் ஆசி பெற்று,தனது மகளுக்குத் திருமணம் ஆனால் போதும் என்பதற்காக அவரது வார்தைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கினான்.(பரிகாரங்களை எப்போதும் ரகசியமாகவே செய்ய வேண்டும்;பகிரங்கப்படுத்தினால்,பலன்கள் கிடைக்காமலேயே போய்விடும்)இதைப் பற்றி அறியாத அவனது நாட்டு மக்கள் மன்னன் மீதே அவச்சொல்லாகப் பேசினார்கள்.பேசக்கூடாத விதங்களில் மன்னனையும்,அவரது மகளையும் இணைத்து வைத்துப் பேசினார்கள்.இப்படி நாட்டு மக்கள்,அவர்களின் மன்னனைப் பற்றிப் பேச,பேச பேசியவர்களிடம் மன்னனின் பாவங்கள் ஒட்டிக்கொண்டன.மலை போல இருந்த பாவச்சுமையானது,நாடு முழுக்க இருந்த மக்களின் அவச்சொற்களால் விலகிவிட்டது.


ஒருநாள்,ஒரு பார்வையில்லாத கணவனும்,அவனது மனைவியும் அந்த காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.அந்த பார்வையில்லாத கணவன்,தனது மனைவியிடம், “இன்று நமக்கு யார் உணவு தருவார்?” என்று கேட்டான்.
அதற்கு அவன் மனைவியோ, “தன் மகளுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்ற ஒரு உன்னதமான லட்சியத்திற்காக, ராஜ்ஜியத்தையே தியாகம் செய்துவிட்டு,காட்டில் தவசியாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு உன்னதமான மன்னனின் ஆசிரமத்தில் தான் நமக்கு இன்று உணவு!!!” என்று கூறினாள்.இருவரும் மன்னனின் ஆசிரமத்தை அடைந்து இளவரசி அளித்த உணவைச் சாப்பிட்டனர்.


இளவரசியிடம், ‘என் புருஷன் பார்வையற்றவர்;இவருக்காக வாழ்நாள் முழுவதும் நான் தியாகம் செய்திருக்கிற பலனில் உனக்கு ஆசிர்வாதம் செய்கிறேன்.உனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்’ என்று இளவரசிக்கு குங்குமம் வைத்து ஆசி கூறினாள்.இந்த ஆசியாலேயே அடுத்து வந்த சில மாதங்களில் இளவரசிக்கு நல்ல வரன் அமைந்து சிறப்பான திருமண வாழ்க்கை அமைந்தது.

இந்த உண்மைச்சம்பவம் தெரிவிப்பது என்ன?
தப்பு செய்பவருக்குத் தண்டனை நிச்சயமாக உண்டு;அந்த தண்டனை எப்படி கழியும்?
தப்பு செய்தவரின் கர்மாவை வேறு யாராவது வாங்கிக் கொண்டால் தான் போகும்.
யார் அடுத்தவரின் தப்புக்களை வாங்கிக் கொள்கிறார்கள்?
பிறரின் வாழ்க்கையில் நடந்த உண்மைநிலையை அறியாமல் வம்பு பேசுபவர்கள்தான் அடுத்தவரின் தப்புக்களின் கர்மவினைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.இவன் இப்படி,அவன் அப்படி,அவளைப் பற்றி எனக்குத் தெரியாதாக்கும்;இவளைப்பற்றி எனக்கு அப்பவே தெரியுமே என்று வம்பு பேசுபவர்களே அடுத்தவர்களின் கர்மச்சுமைகளை சுமக்கிறார்கள்.

நன்றி:ஜோதிடபூமி

Feb 2, 2014

ஆன்மீகப்பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்

இளைஞர்கள் நவீனமாக இருக்க வேண்டும்;ஆனால் அதே நேரத்தில் மேற்கத்திய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது.

நமது பாரத தேசம் மகத்தான ஆன்மீகப்பாரம்பரியத்தை கடந்த 200 நூற்றாண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது;நாம் ஒவ்வொருவருமே சித்தர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்;காலத்துக்கேற்ற மாற்றம்;பாரம்பரியத்தைக் கைவிடாத மாற்றம் என்ற கொள்கையில் ஒவ்வொரு நாளும் பிடிவாதமாக இருக்க வேண்டும்;நமது ஆன்மீகச் சிறப்புகளையும்,தொன்மையையும் யாருக்காவும்,எதற்காகவும்,எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது;இதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

காலத்திற்கேற்ப மாறுதல்களை உள்வாங்கிக் கொள்வது தவறல்ல;ஆனால்,அதே சமயத்தில் நமது கலாச்சாரத்தையும்,தர்மத்தையும் கைவிட்டுவிடலாமா?

முன்னேற்றம் என்ற பெயரில் நமது பண்பாட்டுக்கு எதிரான செயல்களை நாகரீகம் என்று ஏற்றுக்கொள்ளலாமா?

ஒருபோதும் மனித நேயத்தையும்,பரிவுணர்வையும்,பிறருக்கு உதவி செய்வதையும் கைவிட்டுவிடக்கூடாது.அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வது நமது பாரம்பரியம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.ஒருங்கிணைந்து பணிபுரியும் பண்பினை நாம் அனைவரும் வளர்த்துக் கொண்டால்,சில வருடங்களிலேயே நமது தேசம் வலிமைமிக்கதாக மாறிவிடும்.

சுவாமி விவேகானந்தரின் பேச்சு,
விஜயபாரதம்,
வெளியீடு 7.2.14

குலதெய்வம் வழிபாடு - 2

காஞ்சிப்பெரியவா என்ற ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்த காலம் அது;ஊர் ஊராகச் சென்று தங்குவார்;அப்போது ஒருமுறை ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்;அவரை அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்தித்தார்;

“சாமி,ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு;பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது;ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும்;ஆனா, என் வாழ்க்கையில போராட்டமே வாழ்க்கையா இருக்கு.என்ன செய்றதுனே தெரியல” என்று அழுதார்.

பெரியவா அவரிடம், “ குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்றியா?” என்று கேட்டார்.

“குலதெய்வமா அப்டினா?” என்று திருப்பிக் கேட்டார் அந்த விவசாயி.

“சரிதான்.உங்கள் குல தெய்வம் எதுன்னே தெரியாதா?”

“ஆமாம் சாமி, வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க.பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம்;என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால,அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க.நாங்கள்லாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

“உன் முன்னோர்கள் யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?”

“ஒருத்தர் கிராமத்துல இருக்கார்.அப்பா வழி பட்டனார் அவர்”

“அவர் கிட்ட போயி உங்க குலதெய்வத்தை பத்தி கொஞ்சம் கேட்டுட்டு வா”

“என்ன சாமி நீங்க? ஊர்ல எவ்வளவோ கோயில்  இருக்கு;அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு;அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே”

“அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம,குலதெய்வத்த தான் தெரிஞ்சுகிட்டு வரச் சொல்றீங்களே?”

“காரணமாத்தான் சொல்றேன்;ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது.நீ என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்ல;வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம் தான்.எனக்குப் பாத்திரமே கூட தேவையில்லை; ஆனா,உனக்கு பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வைக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா,அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா போகாதா?”

அந்த விவசாயியும் பத்து நாட்கள் கழித்து திரும்பி வந்தார்.

“சாமி,நீங்க சொன்னதை செய்துட்டேன்.எங்க குலதெய்வம் பேரு பேச்சாயிங்க ஒரு அம்மன்.அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சு போய் கிடந்துச்சு.யாருமே போகாம விட்டதால,கோயிலை புதர் மூடிடுச்சு.நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம்.அங்க ஒரு நடுகல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அது மேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு,கற்பூரம் காட்டி கும்பிட்டு வரேன்”

“சபாஷ்! அந்த கோயில நல்லபடியா எடுத்துக் கட்டு.தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டம் தானா நீங்கிடும்.அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! நான் சொன்னதை மறந்துடாதே.பேச்சாயியை விட்டுடாதே” என்றார் பெரியவா.

அவரும் அவ்வாறே செய்து வந்தார்.ஒரு வருடமும் ஓடியது.ஓருவருடம் கடந்ததும்,பெரியவாளைச் சந்திக்க அந்த விவசாயி வந்தார்.இந்த முறை அவரிடம் செல்வச் செழிப்பு தெரிந்தது.முகத்தில் மலர்ச்சி கலந்த புன்னகையும்! பெரியவாளைப் பார்க்க அந்த விவசாயி சும்மா வரவில்லை;தட்டு நிறைய பூக்கள்,பழங்கள்,கொஞ்சம் தட்சிணையாக பணக்கட்டுடன் வந்து நின்றார்.பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்த்தார்.

“சாமீ! நான் இப்ப நல்லா இருக்கேன்.பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க.இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்.ஆனா,எனக்கு விளக்கத்தை மட்டும் இன்னும் தராம இருக்கீங்க.இந்த அதிசயம் எப்படி நடந்தது?” அந்த விவசாயி திரும்பக் கேட்டார்.

பெரியவாளும் மனம் மகிழ்ந்து,


நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குலதெய்வம் ஆகும்.முன்னோர்கள் என்றால்,நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால்,இங்கே முன்னோர்கள் என்றால் நாம் நம் தந்தை வழி பாட்டன்கள்,பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தந்தை வழிப்பாட்டன்மார்கள் வரிசையில் ஒரு பிரம்மாண்டமான ஒழுங்கு இருக்கிறது.அதுதான் கோத்திரம் என்ற ரிஷியின் வழிவழிப்பாதை;தலைமுறைப்பாதை.


பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத்துணையாகக் கைபிடித்திருப்பார்கள்.எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது.இதனால் ரிஷி(சித்தர்) பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல்,ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும்.இது ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன.அந்த கோவில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்;போகாமலும் இருக்கலாம்.அதற்கு உத்தரவாதமில்லை;ஆனால்,குலதெய்வக் கோவிலுக்கு,நாம் பக்தி என்ற ஒன்றை அறிவதற்கு முன்பே,நம் தாய் தந்தையரால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டு,வணங்க வைக்கவும் படுகிறோம்.இதன்படி பார்த்தால்,நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது,எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?

நன்றி: ஆன்மீகக்கடல்

Jan 31, 2014

சி.எஃப்.எல். பல்பு - சில தகவல்கள்


'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.

சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.

வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.

சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.

சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

நாளைய இளைய சமுதாயத்திற்கு.....

நீங்கள் பத்தாம் வகுப்பு/+2/பட்டப்படிப்பு/டிப்ளமோ/ பொறியியல் படிப்பு என்று எதை முடித்தாலும் இந்த உலகத்தை,மனிதர்களைப் பற்றி மிகவும் குறுகிய காலத்தில் புரிந்து கொள்ள வேண்டுமா? குறைந்தது ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரையிலும் நேரடி விற்பனையாளர் என்ற மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்ற வேலைக்குச் சென்றால் போதும்.

நமது கல்விக்கு நமது ஐந்தாம் வயது முதல் 10 முதல் 16 ஆண்டுகள் வரை ஒதுக்குகிறோம்;நாம் விரும்பும் படிப்பில் சேர்ப்பதோடும்,உரிய கட்டணங்கள் செலுத்துவதோடும் நமது பெற்றோர்களின் கடமை முடிந்துவிட்டது;ஆனால்,அந்த படிப்பில் அதிகமான கிரேடு வாங்க நாம் தான் படிக்க வேண்டும்;

படித்து முடித்த பல பட்டதாரிகள்,                               என் ஜினியர்கள்,டிப்ளமோதாரர்கள்,ஐ.டி.ஐ.,முடித்தவர்கள் அனைவருக்குமே வேலை காத்திருக்கிறது.ஆனால்,டிப்ளமோ முடித்த 1000 பேர்களில் 150 பேர்கள் தான் நல்ல வேலையில் சேருகிறார்கள்;பி.ஈ.,பி.டெக்., முடித்த 1,00,000 பேர்களில் 2000 பேர்கள் தான் தனது படிப்புக்குரிய வேலையில் சேருகிறார்கள்;காரணம்?
தனது படிப்பு படிக்கும் போது சாஃப்ட் ஸ்கில் எனப்படும் சிலபல மென் திறன்களை வளர்த்துக் கொள்வதைப் பற்றிய அடிப்படை ஞானம் கூட பலருக்கு இல்லை என்பதே!

அதென்ன சாஃப்ட் ஸ்கில்?

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும்;கூடவே சரளமாக ஆங்கிலப் பேச்சுப்பயிற்சியும் கற்றுக் கொள்ள வேண்டும்;ஒவ்வொரு ஆண்டு விடுமுறை நாட்களிலும் ஒரு நாளுக்கு ஒருமணி நேரம் வரை சரளமாக ஆங்கிலம் பேசப் பழக வேண்டும்;(மாநகரங்களில் வசிப்பவர்கள் ஆங்கிலத்தோடு ஸமக்ஸ்க்ருதம் மற்றும் இன்னொரு ஐரோப்பிய மொழியை முழுமையாகக் கற்றுக் கொள்வது அவசியம்)பனிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வு எழுதிய அன்றே பைக் டிரைவிங்,கார் டிரைவிங் கற்றுக் கொள்ளத் துவங்க வேண்டும்;கற்றுக்கொண்டு,பயிற்சி முடித்தமைக்கான லைசென்ஸ்களை வாங்கியே ஆக வேண்டும்;

சில ஆன்மீக அமைப்புகள் நடத்தும் கோடைகால பண்புப்பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்;அவை குறைந்தபட்சம் ஏழு நாட்களில் இருந்து அதிகபட்சம் 30 நாட்கள் வரை இருக்கும்;இந்த நாட்களில் இப்பயிற்சி முகாம்களில் செல்போன் பேச அனுமதி இராது.உடல்பயிற்சியுடன் கூடிய தேசபக்தி சார்ந்த நாட்டு வரலாறு போதிக்கப்படும்.இதன் மூலமாக நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை இளவயதில் முழுமையாக உணரமுடியும்.தற்போது பெண்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துகிறார்கள்.(தமிழ்நாட்டில் பெரும்பாலான மகன்கள்/மகள்கள் அம்மாகோண்டுகளாகவோ,அப்பாச்செல்லங்களாகவோ இருக்கிறார்கள்;இந்த நிலையை மாற்றி தனது வேலைகளை தாமாகவே செய்யப் பழகுவதற்கும்,எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்வதற்கும்,மாறி வரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்வதற்கும் இந்த முகாம்களுக்கு டீன் ஏஜ் குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும்).இதன் மூலமாக அளவற்ற தன்னம்பிக்கை உருவாகும்;

டிப்ளமோ/பட்டப்படிப்பின் ஒவ்வொரு வருட செமஸ்டர் விடுமுறையின் போதும் மார்கெட்டிங் எக்ஸிகுயூடிவாக உள்ளூரில் இருக்கும் வேலையில் இலவசமாகக்கூட பணிபுரிவது நன்று + அவசியம்.
ஏன் எனில்,நாம் படித்துப் பெறும் பட்டப்படிப்பு இந்த உலகத்தை எதிர்கொள்ள ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே! எது நிஜமான கல்வி தெரியுமா? சக மனிதர்களைப் புரிந்து கொள்வதை உணர வைக்கும் கல்வியே உண்மையான கல்வி! அது சந்தைப்படுத்துதல் என்ற மார்கெட்டிங் துறையில் மட்டுமே விரைவாக கிடைக்கிறது.
யாரிடம் எப்படிப் பேச வேண்டும்? எங்கே ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும்? என்ற அணுகுமுறை விஞ்ஞானம்(BEHAVIOUR SCIENCE) புத்தகங்களில் இல்லை;இருந்தாலும் அதை நம்மால் 30 வயது வரை பின்பற்றி நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திட முடியாது.


அது மட்டுமல்ல;நமது பாரத தேசத்தில் ஒரு மனிதனது உண்மையான சொத்து என்பது அவரு/ளுடைய முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் வீடு,நகைகள்,சேமிப்புப் பத்திரங்கள்,தோட்டம் போன்றவை அல்ல;நம்பிக்கையும்,விசுவாசமும் மிக்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கும் நண்பர்கள்/நண்பிகளே! மனித மனங்களில் இடம் பிடித்து,அந்த நட்பினை ஆயுள் முழுக்க பராமரிக்கும் லாவகமே!


தனி மரம் ஒருபோதும் தோப்பாக முடியாது;மனிதனுக்கு உறவுகள் அவசியம்;உற்றார்,உறவினர் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்;ஆனால்,நல்ல நட்பு கஷ்டகாலத்தில் கைகொடுக்கும்;ஆறுதல் கூறும்;சரியான விதத்தில் வழிகாட்டும்;
பழகும் போது நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்;அவ்வாறு இருப்பது மிகவும் அவசியம்;நல்லதொரு முன்மாதிரி நண்பர்கள்,தம்பதியர் குறைந்துவிட்டதால் தான் இன்றைய இளைஞர்கள் சின்னத்திரை நாயகர்களையும்,நாயகிகளையும்,திரைப்பட நாயகர்களையும்,நாயகிகளையும் முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்பத்தை அனுபவிக்க எத்தனை,எத்தனையோ உறவுகள் ஓடி வரும்;ஆனால்,துன்பத்தை,வேதனையை,அவமானத்தை,துயரத்தை,அவமதிப்பை பகிர்ந்து கொள்வதற்கு இந்த செல்போன் யுகத்தில் எத்தனை உறவுகள் முன்வருகின்றன?

1990 வரை ஒரு நிறுவனத்தில் மேனேஜராவதற்குத்தான் இந்த மாதிரியான திறமைகள் தேவைப்பட்டன;தற்போதைய வருடமே 2014! வேலையில் சேருவதற்கே இந்தத் தகுதிகள் தேவைப்படுகின்றன;பள்ளி,பாலிடெக்னிக்,பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்;முதலில் திக்கித் திக்கித்தான் பேச முடியும்.யார் தன்னம்பிக்கை அதிகமாக  வைத்திருக்கிறார்களோ,யார் தனது எட்டாம் வகுப்பு முதல் தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கம் வைத்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே மேடையில் கோர்வையாகப் பேச முடியும்.

பின்வரும் விதிமுறைகள்+ சந்தைப்படுத்துதல் அனுபவம் இரண்டுமே உங்கள் எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்திடவும்,தாழ்வு மனப்பான்மையின்றியும் வாழ கைகொடுக்கும்;

1.உங்களுக்கென்று இருக்கும் கொள்கைகளைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.

2.உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் உலகம்;அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

3.உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றித் தெரியாவிடில்,உடனே தெரியாது என்று உரியவர்களிடம் ஒப்புக்கொள்ளுங்கள்.அதே சமயம்,அதைப் பற்றி அறிந்து கொள்வது ஒன்றும் அவமானகரமான செயல் அல்ல;

4.எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு;அதற்காக அவர்களை வெறுக்க வேண்டாம்.

5.நீங்கள் ஒரு தவறு செய்து அதை மற்றவர்கள் கண்டுபிடித்து உங்களிடமே சொன்னால்,தயங்காமல் அந்தத் தவற்றை ஒப்புக் கொள்ளுங்கள்;

6.மற்றவர்களின் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.இதனால் அவர்களுக்கு உங்களை பிடித்துப்போகும்;

7.கோபப்படும் போதோ அல்லது குழப்பமான மனநிலையில் இருக்கும் போதோ செல்போனில் சம்பந்தப்படுபவர்களிடம் தொடர்பு கொள்ளாதீர்கள்.குறுந்தகவலும் அனுப்ப வேண்டாம்.

8.பணம்,நேரம்,பேச்சு இவைகளை அளவோடும்,தேவைப்படும் போதும் மட்டும் செலவிடப்பழகிக் கொள்ளுங்கள்.இந்த கருத்தை முறையாகப் பின்பற்றினால் அடுத்த பத்தாண்டுகளில் உங்கள் துறையில் நீங்கள் தான் முன்னோடியாகத் திகழுவீர்கள்.

9.ஒருவருடைய குறையை எப்போதும் எவரிடமும் கூறாதீர்கள்.உங்களைப் பற்றி யாராவது குறை கூறினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
10.எப்போதும் சுருக்கமாகப்பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.

11.மனதைச் சலனப்படுத்தும்,கிளுகிளுப்புக்குள்ளாக்கும்,போதைக்குள்ளாக்கும் எந்த விஷயத்திற்கும் ஒரு போதும்,ஒரு தடவைகூட இடம் தராதீர்கள்.ஆரம்பத்தில் மன மகிழ்வூட்டுவதாகவும்,போகப் போக உங்கள் உடல் ஆரோக்கியத்தை அந்த ‘கிளுகிளுப்பு’ சீர்குலைத்துவிடும்;உங்கள் நினைவுத்திறனை அழித்துவிடும்;நோயாளியாக்கிவிடும்; போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் உங்கள் இடத்தை தக்க வைக்க முடியாமல் போய்விடும்.

12.இணையம்,செல்போன்,முகநூல்,டுவிட்டர் போன்றவை தகவல் தொழில்நுட்ப சாதனைகளின் உச்சம் தான்! ஆனால்,நேரடியாக சந்தித்து பேசி,பழகுவதைப் போல சிறந்த அணுகுகுறை(behaviour)யைப்போல வேறு எதுவும் இந்த உலகில் எந்த நூற்றாண்டிலும் தோன்றப்போவது கிடையாது.நேரடியாகப்பேசி,பழகுவதன் மூலமாகவே ஒரு சிறந்த நட்பையோ,வாழ்க்கைத்துணையையோ மதிப்பிட முடியும்.

13.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டுவிடவேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.

14.பிற மனிதர்கள் பேசும் போது உன்னிப்பாக கவனிக்கப்பழகிக்கொள்ளுங்கள்.

15.பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்;அதே போல பிறர் உங்களுடைய நேரத்தை வீணடிக்க அனுமதிக்காதீர்கள்.

16.ஒருவருக்கு ஒரு உதவியைச் செய்வதில் சிறிது சந்தேகம் இருந்தாலும்,அதைச் செய்ய ஒப்புக் கொள்ளாதீர்கள்.

17.முடிவு செய்தல்,செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் (உங்களிடம் பணிபுரிபவர்களுக்கு) முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

18.ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்;போலியான பாராட்டுக்களை ‘அள்ளி’விட வேண்டாம்.

19.தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள். மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

20.உங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நமது பாரத தேசம் வல்லரசாக நாம் செய்ய வேண்டியது என்ன? நமது வேலை/தொழிலை அக்கறையோடும்,நேர்மையாகவும் பார்ப்பது மட்டுமே!

நன்றி: தினமலர்

Jan 24, 2014

நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். . அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்

இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான்.

சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில்,

உணவின்றித் தவித்த இருகுழந்தைகளும் ஒரு முதியவரும் பட்டனர். பொட்டலங்களைக் கொடுத்தான்.

முதியவர் மகிழ்ந்து, தன்னிடமிருந்த பழைய செப்பு நாணயங்களைக் கொடுத்தார்.

அதே நாளில் பழைய நாணயங்கள் சேகரிக்கும் கோடீஸ்வரர் ஒருவரைக் காண நேர்ந்தது.

இந்த நாணயங்கள் நல்ல விலைக்குப் போயின.

கொடுப்பவர்களே பெறுகிறார்கள் என்பது புரிந்தது.

Jan 19, 2014

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

நினைவாற்றல் குறைபாடு நோயா?

இயற்க்கை அன்னையின் இயல்பிற்கு மாறாக இருப்பின் எல்லாமே நோயே.

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு..!

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.
பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்;

புகார் கொடுக்கலாம்:

சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால்,

எண்.914,

பூந்தமல்லி நெடுஞ்சாலை,

அரும்பாக்கம்

என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Jan 3, 2014

டை அடிப்பவரா நீங்கள்?

பலர் தவிர்க்கமுடியாத ஒரு விஷயம் ஹேர் டை. ஆம் எனக்கு 17 வயதில் இருந்து தேவை பட்டது. பலருக்கு 30 வயதில் ஆரம்பித்து 45 வயதிற்குள் கண்டிப்பாக நரை என்ற விஷயம் தவிர்க்கமுடியாமல் போகிறது. இதில் என்னை பொறுத்த வரை 75% சதவிகித ஆண் பெண் ஹேர் டை உபயோகத்திற்க்கு ஆளாகின்றனர். இதில் சில பேர் தலைக்கு மட்டும், சிலர் மீசைக்கு, சிலர் தாடிக்கு, சிலர் நெஞ்சு முடிகளுக்கு என்று ஹேர் டை உபயோகம் நம் உடம்பில் ஒரு அங்கமாகிறது. சில பெண்கள் நரை அவ்வளவு இல்லாதவர்கள் மருதாணி அரைத்து போட்டுகொண்டு இருந்ததும் இப்பொழுது அதுவும் ஹேர்டை கம்பெனிகள் மருதாணி, நெல்லிக்காய், என்று எல்லாம் இயற்கை வடிவில் என நமக்கு கெமிக்கல் கலவைதான் கொடுக்கின்றனர்.

இதில் இப்ப நம்மவர்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாகி சார் எனக்கு டை பற்றி இப்ப நல்லா தெரியும் அதனால் " நான் அம்மோனியா" தான் போடுவேன் என்று பெருமையாக கூறுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு அம்மோனியா நான் அம்மோனியா வித்தியாசம் தெரிவதில்லை. தெரிந்தாலும் 50% சதவிகிதம் தான் நீங்கள் ரிஸ்க்கை தவிர்க்கலாம். முதலில் அம்மோனியா டைதான் முன்னைய காலத்தில் பிரபலம். இதில் உள்ள ஒரே வித்தியாசம் இந்த அம்மோனியா டை அடித்தால் கலர் போகவே போகாது. ஆனால் புது முடி வரும்போது கீழே வெள்ளைமுடி தெரியும். அதுபோக அம்மோனிய டை மிக மோசமானது. தொடர்ந்து 10 வருடங்கள் உபயோகித்தால் ஆஸ்மாவும் 15 வருடத்தில் கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது. அதனால் நான் அம்மோனியா உபயோகித்தால் மட்டும் நல்லது என நினைக்கவேண்டாம். நான் அம்மோனியாவில் தாக்கம் கொஞ்சம் தான் குறைவு மற்றபடி நான் அம்மோனியா டையும் இதே பிரச்சினைகள் தான். மருதாணி நீங்கள் அரைத்து போட்டால் தான் சேஃப், ஆனால் கடையில் விற்கும் ஹென்னா, நெல்லிகாய் ஹேர் டை இதெல்லாம் நமக்கு நாமே நாள் குறிக்கும் ஸ்லோ பாய்ஸன். ஆம் இந்த ஹேர் டையில் முக்கிய நச்சு பொருள் "ஃபீனலியின்டைலமின்" எனும் (Para-Phenylenediamine - PPD ) பொருள் மிக மோசமான ஒரு விஷயம். ஹென்னா எனப்படும் மருதாணி கொடுக்கும் நிறம் சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு தான். அதனால் ஹென்னா போட்டு கருப்பு நிறம் ஆனால் கண்டிப்பாக அது பிபிடி உள்ள ஹேர் டைதான். 100% இயற்கை ஹேர் டை என்று ஒரு ஹேர் டை உலகத்தில் இல்லை. இதில் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஏன் தெரியுமா - இந்தியர்கள் தான் " நேச்சுரல் பிளாக்" ஃபுல் பிளாக் வண்ணத்தை உபயோகிக்கிறோம். இதில் அதிகமாக கெமிக்கல் கலக்கபடுவதால் ரிஸ்க் அதிகம். நார்மலாக ஒரு சராசரி மனிதன் 10 - 12 முறை டை அடிக்கிறான். இது மிகவும் ஆபாத்தான விஷயம். மீசைக்கு அடிப்பது, நெஞ்சு முடிக்கு அடிப்பது மிக மிக ஆபத்தானது. சிலருக்கு மிக ஸ்லோவாக மூச்சு விட சிரமம் ஆரம்பித்து பிறகு அது ரெகுலர் பிரச்சினையாகிவிடும்.

நிறைய நாடுகளில் இந்த பிபிடியை தடுக்க ஹெல்த் மினிஸ்ட்ரி போராடினாலும் இந்த சலூன்கள் இதை பெருமளவில் மறைத்து டை போடுகின்றனர். டை போடுவதால் முடி கொட்டும் மற்றும் அதிக க்ருப்பு ஷேடுகளை தவிருங்கள். ஒரு பூத கண்ணாடியை வைத்து என்ன கெமிக்கல் உள்ளது என பாருங்கள். ஏன் என்றால் அவ்வளவு சிறிதாக தான் கெமிக்கல் டீட்டெயில் பற்றி போட்டிருப்பார்கள் அந்த கெமிக்கல் டீட்டெயிலை பற்றி கூகுள் செய்யுங்கள் வாழ்க்கையில் டை அடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள். சரி டை போடுவது நம் வெள்ளை முடியை மறைக்கத்தான் சரி என்ன செய்வது என டை போடும் மனிதர்களை வேண்டுமானால் பார்த்து பரிதாப படலாம் ஆனால் நல்லா கருப்பாய் இருக்கும் முடியை பான் பராக், காரக்குழம்பு தலையாக்கும் இளைஞன் இளைஞிகளை நினைத்தால் தான் மிக பரிதாபம். ஏன் என்றால் அவர்கள் ஒரு தடவை பயன்படுத்தினால் வாழ்க்கை முழுவது அந்த கலரை போட வேண்டும் இல்லையெனில் அதை விட்டால் நான் கடவுள் ஆர்யா போலத்தான் ஆகவேண்டும். முழுவதும் விட மொட்டை அடித்து புது முடி வளர்ப்பதை தவிர வேறு ஒன்றும் பண்ணமுடியாது. ஆண்கள் பரவாயில்லை பெண்கள் தான் பாவம் மொட்டையும் அடிக்கமுடியாது, கலர் பண்னும் பழக்கத்தையும் விட முடியாது. நிறைய பேர் கல்யானத்திற்க்கு முன் இந்த தவறை செய்வதால் கல்யானம் ஆன பிறகு கணவர்களின் முக்கிய முகம் சுழிப்பு இந்த விஷயம் தான் அதுவும் கூட்டு குடும்பத்தில் சான்ஸே இல்லை. முடிந்த அளவு டை உபயோகத்தை கட்டுபடுத்துங்கள். இரண்டாவது வெளியே செல்லும் நாட்களில் மட்டும் பழைய டெக்னிக் "ஐடெக்ஸ்" கண்மை போட்டு போங்கள் சிலர் வெள்ளை முடியுடன் இருக்க பழகி கொள்ளுங்கள் இல்லையெனில் அட்லிஸ்ட் மாதம் ஒரு முறை என்பதை தவிர்த்து இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று மாற்றினால் பிரச்சினையை தள்ளிப்போடலாம். கர்ப்பிணி பெண்கள் பத்து மாதம் தயவு செய்து போடவே வேண்டாம். இரண்டு கலவை மிக்ஸ் பன்னும் ஹேர் டை 100% பயன்படுத்துவதை தவிருங்கள் இதில் கண்டிப்பாக பிபிடி இருக்கும்